- Monday
- April 6th, 2026
நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. (more…)
யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)
வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை (more…)
இந்துக் கோவில்களின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்துக் கோவில்களின் பிரதிநிதிகளிடம் நிதியை கையளித்தார். (more…)
இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றுக்கு தற்கால வாழ்க்கை முறை, சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகள் இல்லாமை என்பன சாதகமாக அமைந்துவிடுகின்றன. (more…)
வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த சேந்தாங்குளம் பகுதியில், ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஓ.எம். நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள், அந்தப் பகுதி மக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன. (more…)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கள் வரை 20 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். (more…)
யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. (more…)
வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர். (more…)
வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றி இளைப்பாறிய பலருக்கு இன்னமும் விதவை, அநாதைகள் ஓய்வூதிய நிதி இலக்கம் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)
சாவகச்சேரி பிரதேச சபையால் அடுத்த வருடத்தில் பிரதேசத்தில் 310 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (more…)
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தமது எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் வட பகுதி சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)
மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்தில்கொண்டு 'போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு' இன் தலைவர் வி.சகாதேவன் 'எமது மீனவர்களின் வாழ்வுரிமைக்காக' என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
2013ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைகள் நாளை 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறன. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். (more…)
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
