Ad Widget

நெடுந்தீவில் கட்டுமானப் பணிகளுக்கு வெளியிடங்களில் இருந்து பொருள்கள்; துறைமுகத்தில் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி

நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது.

உள்ளூரில் கல், மண் போன்ற பொருள்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. படகுகள் மூலம் எடுத்து வரப்படும் இந்தப் பொருள்களைத் தற்போது அமைக்கப்பட்டுள்ள துறைமுகப் பாலத்தில் இறக்கி ஏற்றுவது சிரமமாக உள்ளது.

பழைய துறைமுகப் பாலத்தில் இவற்றை இறக்கக் கூடியதாக உள்ள நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் ஏற்றுவதற்கும் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக எடுத்து வரும் பொருள்களையும் பழைய துறைமுகத்தில் இறக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என படகு ஊழியர்கள் கேட்கின்றனர்.

அதிக அளவிலான பொருள்களை எடுத்துவருவோர் உட்பட கட்டட ஒப்பந்ததாரர்களும் இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

Related Posts