வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

சுட்டி விளக்குகள் விற்ற வர்த்தகர் மீது தாக்குதல்

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

பல்கலைக்கழகத்தில் படையினர் வெறியாட்டம்! – மாணவர்கள் மீது தாக்குதல்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் சுடரேற்றம்!.

சரவணபவன் எம்.பி மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதுதாக்குதல்!

யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி  தெரிவித்தார். (more…)

தைமாதம் 1ம் திகதி சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்! அடைக்கலநாதன் எம்.பி அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  (more…)

அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு-அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார். (more…)

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)

யாழ். ஆஸ்பத்திரிக்கு முன்பாக பயணிகளை ஏற்ற, இறக்கத் தடை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா. (more…)

வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்து

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். (more…)

அரசால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவம் பல வழிகளிலும் பாடுபடுகிறது.யாழ்.தளபதி

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

காசோலை மோசடி

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு அனுமதி

வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டும் கடலட்டை பிடிக்கலாம் என்று அத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

யாழ் போதானா வைத்திசாலையில் இராசாயனப்பொருட்களுக்கு பற்றக்குறை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம்?

யாழ் போதானா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்குத் தேவையான இராசாயனப் பொருட்கள் பற்றக்குறையாகக் காணப்படுவதால் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்திசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தாரஜா தெரிவித்துள்ளார். (more…)

ஏழு துறைகளில் பெரும் அபிவிருத்தி இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா முன்வந்தது

தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளில் பெரும் அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா என்ற நிறுவனம் ஜனாதிபதியிடம் அனுமதியைப் பெற்றுள்ளது என்று நிறுவனத் தலைவர் வா.இராசையா தெரிவித்துள்ளார். (more…)

ஜனவரியில் ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்படுமென்று வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆர்.செல்வராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.வடமாகாணத்தில் உள்ள 12 வலயத்திலும் இருந்து 1500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். (more…)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைவோம்: மக்கள் இயக்கம் அறைகூவல்

கூடங்குளம் அணு உலை பாடங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதற்கு எதிராக பேதமின்றி ஒன்றிணைவோம் என கூடங்குளத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)

கார்த்திகைத் தீபத் திருநாளைக் கொண்டாட ஒத்துழையுங்கள் இந்து மகா சபை கோரிக்கை

கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: (more…)

போலி நகைகளை 4 முறை வங்கியில் அடகு வைத்தவர் கைது

தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். (more…)

பரு. பிரதேச சபையின் உபஅலுவலகம் அம்பனில் செயற்பட ஆரம்பித்தது

பருத்தித்துறை பிரதேசசபை குடத்தனை உப அலுவலகம் 13 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அம்பனில் கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. (more…)

188 ஆண்டுகளைக் கடந்தது உடுவில் மகளிர் கல்லூரி

88 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது உடுவில் மகளீர் கல்லூரி. உடுவில மகளிர் கல்லூரியின் 188 ஆம் ஆண்டு நிறைவு தினமும் கிறிஸ்மஸ் தினக்கொண்டாட்டமும் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts