Ad Widget

குளிரான காலநிலை நீடிக்கும்

'குளிர்கால பருவக்காற்று' என அறியப்படும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக பல பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலும் அநுராதபுரத்திலும் வெப்பநிலை 18 பாகையாகவும் யாழ்ப்பாணத்தில் 19 பாகையாகவும்  நுவரெலியாவில் 7.7 பாகையாகவும்  குறைவடைந்துள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.  (more…)

பெற்றோல் தாங்கி வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டுக்கொண்டிருந்தது.அதே சமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகியது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Ad Widget

வடமாகாண தேசியப் பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; வடமாகாணக் கல்வித் திணைக்களம்

வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.உடுப்பிட்டி மாணவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தோற்றி  அகில இலங்கை  ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.நேற்றுக் காலை 10 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு 11 மணிக்கே வெளியாகியது.கொழும்பு மாவட்டத்தில் காலை வெளியாகும் பெறுபேற்றினை மாலை...

யாழ்.கிழக்கு கடலில் சூறாவளி: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

யாழ். குடாநாட்டின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக  இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடலில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்திலே சூறாவளி மையம் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இலங்கை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்போகிறேன்- டக்ளஸ் தேவானந்தா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் ஆட்கடத்தல்களில் ஈ.பி.டி.பி ஈடுபட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக...

யாழ்.மக்களை கலாசார பிறழ்வு, போதை பொருட்களிலிருந்து பாதுகாக்க புதிய குழு

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கலாசார பிறழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையிலிருந்து யாழ்.மக்களை பாதுகாப்பதற்காகவும் யாழின். கலாசாரத்தினை பேணுவதற்காகவும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் புதிய குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதிநிதி சீ....

கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை விட மோசம்!- பசில் ராஜபக்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்கிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(21.12.2011) நாடாளுமன்ற கட்டடத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த...

தமிழ் மக்களின் உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துவிடமாட்டோம்; -இரா. சம்பந்தன்

இந்த நாட்டின் நிர்வாக மற்றும் நீதி துறைகளின் அதியுச்ச பதவிகளில் இருந்தவர்கள் 18 ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பை மூன்றே மூன்று ஜே.வி.பியினர் எதிர்த்ததும் நீதிமன்றம் பிரித்ததை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம். (more…)

அடுத்த ஆண்டுக்கான பாடசாலைகளின் கல்வித் தவணைகள் கல்வி அமைச்சினால் அறிவிப்பு

பாடசாலைகளுக்கான 2012ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் 203 நாட்கள் நடைபெற வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர அறிவித்துள்ளார்.அத்துடன் அதற்கான தவணைகள் பற்றிய விபரத்தினையும் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 5ம் திகதி வரை...

யாழ். உட்பட்ட 14 கரையோர மாவட்டங்களில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை

இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கைக்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் இந்த ஆழிப்பேரலை முன்...

பொறுப்புக் கூறும் விடயங்களை கையாள்வதில் ஆணைக்குழு அறிக்கை தவறிழைத்துவிட்டது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக் கூறும் விடயங்களை கையாள்வது தொடர்பில் அர்த்தபுஷ்டியான வலுவான முறைமைகளை கையாள்வதிலும் இருந்து முற்று முழுதாக தவறிழைத்து விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 13 பேர் கையொப்பமிட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பி வைத்துள்ள மேற்படி ஊடக அறிக்கையில் மேலும்...

சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன! கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும்! சுமந்திரன் எம்.பி. கோரிக்கை! அஸ்வருக்கு எச்சரிக்கை

சபையை கட்டுப்படுத்த வேண்டியது அக்கிராசனத்தின் பொறுப்பு. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவே! உங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் இடையூறுகளை தாங்க முடியவில்லை. சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன், கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும் என்றும் கோரி நின்றார்.பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த்...

புலம்பெயர் சொந்தங்களின் பணத்தில் த.தே.கூ. உல்லாசம் அனுபவிக்கிறது: டக்ளஸ்

புலம்பெயர் சொந்தங்களிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தி சம்பாதிக்கும் பணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

கூட்டமைப்பு- அரசாங்கம் பேச்சுவார்த்தை இணக்கமின்றி தொடர்கிறது!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (19.12.2011) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியதுடன் இதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் ஏனைய நாடுகளின் காணி அதிகாரங்களை...

ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவாகியுள்ளார்.தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது....

ரணிலா, கரு ஜயசூரியவா? ஐ.தே.க. தலைவர்! பலப்பரீட்சை இன்று!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும், கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.தலைவர் பதவிக்கு எழுந்திருந்த நெருக்கடிக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பினை நடத்த நேற்று கூடிய செயற்குழு முடிவு செய்துள்ளது.இன்று திங்கட்கிழமை நண்பகல்...

பேச்சுவார்த்தைகள் குறித்த சுமந்திரனின் கருத்து பிழையானது –பா.உ சஜின்வாஸ்

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

யாழில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி: இமெல்டா சுகுமார்

யாழ் மாவட்டத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய இடத்தில், இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின...
Loading posts...

All posts loaded

No more posts