Ad Widget

இந்திய கல்வி நிறுவனங்களின் கல்விக் கண்காட்சி ஆரம்பம்

indian-exhibition_jaffnaஇந்திய கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் சந்திரசிறி கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இந்தக்கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 07 இந்திய கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளதோடு, இந்தியாவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான அனுமதிகளையும் வழங்கி வருகின்றது.

இந்த கண்காட்சியானது இன்றும் நாளையும் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழில் இந்தியக் கல்விக் கண்காட்சி

Related Posts