- Monday
- July 14th, 2025

யாழ்ப்பாணத்தில் உதயன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விடயமாக யாரும் சாட்சியமளிக்கமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் (hayleys agriculture) நிறுவனத்தின் புதிய கிளை இன்று திங்கட்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். கோண்டாவில் வீதியிலுள்ள விவசாய திணைக்களத்திற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது. (more…)

கொழும்பு – 15, மோதர பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அந்தந்த காணிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினர் எந்த வேட்பாளரையாவது நிறுத்தி வெற்றி பெற்று காட்டட்டும். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தால் தீவிரமாக்கப்பட்டுள்ள காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. (more…)

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்ற 2,850 டிப்ளோமாதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார். (more…)

அச்சுவேலிப் பிரதேசத்தில் ஏ.ரி.எம். அட்டைகளில் பண மோசடியில் ஈடுபட்ட கோப்பாய் பகுதி இளைஞனை அச்சுவேலி குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 80 பேர் இலங்கை கடற்படையினரால் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

பத்து வருடகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் ஐனாதிபதி சாரணனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடிப் பகுதியில் உலகதரிசனம் நிறுவனத்தின் 7.5 மில்லியன் ரூபா மற்றும் வலிமேற்கு பிரதேச சபையினால் 2 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாணம், கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

யாழ் கோட்டை கடற்கரைப் பூங்காவில் பொழுதை கழிப்பதற்காக வந்திருந்த இளைஞர் மீது இராணுவச்சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாணத்துக்கான சேவைகளை வழங்கவென ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது. (more…)

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு போட்டியின் போதே தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது. (more…)

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆழமாக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை முகத்திற்கு நேற்று வந்தடைந்துள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts