Ad Widget

உதயன் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும்: ஜனாதிபதி

mahintha_CIயாழ்ப்பாணத்தில் உதயன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விடயமாக யாரும் சாட்சியமளிக்கமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகநிறுவனங்களின் தலைவர்களை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பத்திரிகை மீதான தாக்குதல் பற்றி ஊடாக பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசாங்கம் விசாரணைகள் தொடங்குமெனவும் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Posts