Ad Widget

அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 80 பேர் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கைது

arrest_1சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 80 பேர் இலங்கை கடற்படையினரால் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 38 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 24 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts