விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் லண்டனில் இருந்து வந்தவர் கைது!!

பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

பிரபாகரனின் பிறந்த தினம் – பொலிஸார் விசாரணை!

வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக...
Ad Widget

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்!!

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி மீற்றர் மழை!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதானல் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவு(TID) பொலிசாரினால் இளைஞன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்., கைது செய்யப்பட்டவர்  யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

இளைஞர்கள் இடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்...

உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர்...

விசுவமடுவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை!

முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால்...

மாவீரருக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! கொட்டும் மழையிலும் திரண்ட மக்கள்!!

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம்...

கைதடியில் பூசகரை கட்டிவைத்துவிட்டு கொள்ளை! பெண் ஒருவர் கைது!!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று(27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள்...

திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு சாத்தியம் !

சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இந்த தாழமுக்கமானது, மெதுவாக நகர்ந்து செல்கின்றது. மேலும் தீவிரமடைவதுடன் இன்று சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக்...

கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது....

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் தற்போது நடைபெற்று வரும் 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (26) மாலை இடம்பெற்ற விசேட...

மன்னார் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகள் மீது மக்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்து” வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் வைத்திய சாலைக்கு முன் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்...

கொழும்பிலிருந்து யாழ் வந்த பஸ் விபத்து ; பெண் உயிரிழப்பு

புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பலத்த மழை; வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதுக்குடியிருப்பின் பல இடங்களில் வெள்ள...

சீரற்ற வானிலை – யாழில் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார். நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்....

தனிப்பட்ட பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா இராமநாதன்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அர்ச்சுனா இராமநாதன் ​​பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து...

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் இளைஞர்கள்!

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts