- Thursday
- April 23rd, 2026
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். (more…)
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)
வடக்கு மாகாண சபையின் அலுவலகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை முதலில் முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாணசபை முதலமைச்சராகக் கடமையேற்றுக் கொண்டுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)
வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளருமாவார். பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு உறுப்பினர் அன்ரனி நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று(9) இரவு நடைபெற்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தின் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினமே அமைச்சர்கள் தெரிவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை தெரிந்ததே. வட மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை(11) வீரசிங்கம்...
தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)
வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர்...
வடக்கு மாகாண சபைத் தேர்தலையும் ஆனைக்கோட்டையில் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீண்டும் துப்பாக்கிகளுடனும் தொலைத் தொடர்பு சாதனங்களுடனும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். (more…)
கிளிநொச்சி - கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கானஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்று திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். (more…)
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. (more…)
இலங்கை கடல் வலயத்துக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். (more…)
மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலாவது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். (more…)
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. (more…)
வடமாகாண சபை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு முன்னர் அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி உறுதியான விபரம் வெளியிடப்படுமென (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் பல் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். (more…)
வடமாகாணத்தில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றவுள்ள மாணவர்களில் பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சைக்கு 11 ஆயிரத்து 420 பேர் அனுமதி பெற்றுள்ளதாக வடமாகாண தகவல் தொழில்நுட்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் லெனின் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
