- Monday
- August 25th, 2025

விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார். நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை...

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். (more…)

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை...

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் (more…)

வடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். (more…)

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தவுள்ளதை தமது கூட்டமைப்பு எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

காணாமற்போனோரின் உறவுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். (more…)

யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை சந்தித்துள்ளார். (more…)

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வன்முறைகள் மூலம் அடக்கப்படுவதற்கு எதிராக ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். (more…)

முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

தமிழீழ விடுதலைப்போரையும், புலிகளையும் ,மக்களின் இழப்புகளையும் கேவலப்படுத்தவதற்காகவா ‘இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும்’ சத்தியப்பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்யபோகிறீர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

தமிழரசு கட்சி எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார். (more…)

2013 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. (more…)

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஈழமக்கள் ஜனாநாயக் கட்சியின் அமைப்பாளருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts