Ad Widget

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் மரணம்

dead-footக.பொ.த சாதரண தர பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த அதிபர் பசுபதி கணேசமூர்த்தி (47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கிளிநொச்சி, இராமநாதபுரம மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 02.20 மணியளவில் தனது உடலில் ஏதோ செய்கின்றது எனக்கூறிய அதிபர், சில நிமிடங்களில் உயிரிழந்ததாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவருடன் இரவு இரவு உணவு உட்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அதிபர் திங்கட்கிழமை இரவு உண்ட உணவு விஷமானதால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலமோ என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts