அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் – இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைக்கு, இலங்கை தனது பதிலை வழங்கியுள்ளது. அவ்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இது தொடர்பில் மேலதிகக் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது...

போதையை கைவிடுங்கள் கணவனின் பிணத்துடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப்...
Ad Widget

பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை?

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு!

ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று...

தமிழருக்கு நேற்று சந்தோசமான நாள் – வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...

நவீல்ட் பாடசாலை பாலியல் குற்றச்சாட்டு : சைகை சாட்சியங்களை பதிவு செய்வதில் தாமதம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான சாட்சியங்கள், வாய்பேச முடியாதவர்களாக இருப்பதால், அவர்களுடைய சாட்சி பதிவு செய்வதற்கு சைகை மொழிபெயர்பாளர் ஒருவருரை பெறுவதில் தாமதம் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வெகுவிரைவில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு பூரணமான அறிக்கையினை சமர்பிக்குமாறும், வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் சாவகச்சேரி...

‘போர்க்களத்தில் ஒரு பூ’ : என்மீது தவறில்லை – S.V. சேகர்

இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்தத் திரைப்பட விவகாரம் தொடர்பில் தன்மீது தவறில்லை என மறுதணிக்கைக்குழுவின் தலைவர் எஸ்.வி.சேகர் விளக்கமளித்துள்ளார். திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்த நிலையில், கடந்தவாரம் பேட்டியளித்த அத்திரைப்படத்தின்...

சர்வதேச விசாரணையை ஏற்கமுடியாது! – ராஜித

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும்...

வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளரின் இடமாற்றம் ஏற்றதல்ல என்கிறார் சத்தியலிங்கம்!

மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர்...

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல நியமனம்!

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான துடுப்பாட்ட ஆலோசகராக இவர் செயற்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துபாயில் இடம்பெறவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னாள்...

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

சிலி நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியான இலாபெல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவியலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது, கட்டிடங்கள் ஊசலாடியது போன்று குலுங்கின. இரவு நேரம் என்பதால், செய்வதறியாது...

தூங்காவனம்’ படம் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் – கமல்ஹாசன்

‘தூங்காவனம்’ படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத்...

ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில்...

கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ்

போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,...

போர்க்குற்றம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல்...

கடத்தப்பட்ட மணப்பெண் வீடு திரும்பினார் !! – மூவர் கைது

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீட்டில் விடப்பட்டார். இதனைதொடர்ந்து இக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கனடா நாட்டில் இருந்து வந்த 28 வயது யுவதிக்கு...

டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயனுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயன் உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் விடுத்திருந்தார். மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன்...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...

கடலுக்குச் செல்வோர் அவதானம்

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி...
Loading posts...

All posts loaded

No more posts