சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்!

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் உள்ள...

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடியில் இன்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பெருமளவு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில்...
Ad Widget

தப்பு செய்வேன் என எதிர்பார்த்து வாளோடு காத்திருந்தனர்.. விமர்சகர்கள் பற்றி டோணி

"தவறு நடைபெறும் என எதிர்பார்த்து நிறைய பேர் வாளை தயாராக பிடித்து வைத்திருந்தனர்" என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்தார். 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. டோணி பொறுப்பாக ஆடி 92 ரன்களுடன் கடைவரை களத்தில் நின்றதால் இந்தியா 247 ரன்களை எட்ட முடிந்தது....

‘கமல்ஹாசன் நன்றி இல்லாதவர்’ – சரத்குமார்

கமல் ஹாஸனின் பல பிரச்சினைகளை நான்தான் முன் நின்று தீர்த்து வைத்திருக்கிறேன். அவர் நன்றி இல்லாதவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூத்த நடிகரான கமல் ஹாஸன் எடுத்திருப்பது குறித்து சரத்குமார் கூறுகையில், "விஸ்வரூபம்', ‘உத்தம வில்லன்' ஆகிய...

இனி பார்வையிழந்தோரும் பேஸ்புக் புகைப்படங்களைப் பற்றி அறியலாம்!!

பல்வேறு தகவல்கள் அடங்கிய வண்ணங்கள் நிறைந்த புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் இதில் உள்ள படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள, மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர் என தனக்கு விருப்பமான விஷயங்களை...

ரஜினியின் பாட்ஷா ஸ்டைலில் உருவாகும் அஜித்தின் வேதாளம்

அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் கட்ட பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் தான்...

கலிபோர்னியாவில் குழந்தை பறக்கும் அதிசயம்

மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலன் லோரன்ஸ் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ....

குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேர் கைது

வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல்...

ரவிராஜ் கொலை – கருணாவிடமும் தொடங்கியது விசாரணை!

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு கருணா நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ் கொலை மேற்கொள்ளப்பட்டது என புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை...

பாலியல் குற்றச்சாட்டு : யாழ். இராமநாதன் நுண்கலைப்பீட துறைத் தலைவர் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...

அரசியல் கைதிகளுக்கு உயிராபத்து நேர்ந்தால் அரசே பொறுப்பு

"அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்", உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை...

பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்களே இடர்படுகின்றனர்

பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்கள் அதிகளவான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களே அதிகளவான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் உள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். வடமாகாண தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சிறுவர் தொழிலாளர்கள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற நடைபவனி மற்றும் மானிப்பாய்...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கிராம அலுவலர்களை பொலிஸ் கடமையில் ஈடுபடுத்த பரிந்துரை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, கிராம அலுவலர்களை பொலிஸ் கடமை புரியும் அதிகாரிகளாக நியமனம் செய்யுமாறு அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...

மஹிந்தவின் கடும் எதிர்ப்பையடுத்து விசாரணை ஒத்திவைப்பு!

பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படுவதற்கு அதிகாரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததையடுத்து, அவர் மீதான நேற்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை விசாரணை...

ஜனாதிபதியே வாக்குறுதி தரவேண்டும்! நீதி அமைச்சரின் உறுதி, கோரிக்கையை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு!!

நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ...

இலங்கை அணி 484 ஓட்டங்களுடன் பலமான நிலையில்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸகீர்கான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் வெளியிட்டார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து...

யாழில் சிறுவர் தொழிலை இல்லாதொழிப்பதற்கான நடைபவனி

இலங்கையில் இருந்து சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம்´ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்று காலை ஆரம்பமானது. வணிகர் கழக கட்டிடத்தில் நிறைவடைந்த நடைபவனியைத் தொடர்ந்து சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வும் ஒன்றுகூடல் வைபவமும் யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது....

கைகள் கட்டபட்டு வாயில் டேப் ஒட்டிய நிலையில் பேஸ்புக்கில் குழந்தையின் படத்தை வெளியிட்ட தாயார்

வடக்கு மேற்கு மெக்சிகோ திஜுவானாவை சேர்ந்த பெண் ரோசா இவர் தனது பேஸ் புக் பக்கத்தில் கைகள் கட்டபட்ட நிலையிலும், மற்றும் குழந்தையின் வாயை டேப் கொண்டு ஒட்டபட்ட நிலையிலும் படுத்து இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பேஸ்புக் ஆர்வலர்களின் ஏக கண்டனத்துக்கு அந்த பெண் ஆளானார். இதை தொடர்ந்து...

அரசியல் கைதிகளைச் சந்தித்தனர் சுமந்திரன், செல்வம், மனோ, வேலுகுமார்!

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சயந்தன், அஸ்வின் ஆகியோர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். "உங்களின் விடுதலைக்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்மூலம்...
Loading posts...

All posts loaded

No more posts