பிரபாகரன் பிறந்த நாள் : சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!!

எதிர்வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி முதல் இலங்கையில் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் அப்பம், பிளேன் ரீ,பால்ரீ உட்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சம்மேளன தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி பிளேன் ரீ விலை 5ரூபாவாலும், பால்ரீ 5...

தீவகப் பகுதிகளில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்கள்

யாழ். தீவகப் பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் சட்டம் மற்றும்...
Ad Widget

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு !!

யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில்...

சம்பந்தனின் தோளில் தட்டி விடைபெற்ற மஹிந்த

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. இதன் போது முன்னாள் ஜனா­தி­ப­தியும் குருணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச மாலை 4.55 மணி­ய­ளவில் சபைக்கு வந்தார். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது வரவு – செலவு திட்­டத்தை 2.00...

ஐ.நா.சபையின் 20 பரிந்துரைகளில் எதனையும் நீக்கும் பேச்சுக்கு இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா.சபையின் இலங்கைக்கான 20 பரிந்துரைகளில் எவ்விடயத்தையும் நீக்க வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை.அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நிறைவேற்ற முடியுமென்ற ஆலோசனைகளையே கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்மானம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இரண்டாவது சர்வகட்சி மகாநாட்டில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர்...

பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்காரம்! – பந்துல

அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் நெல்...

தாடி வளர்த்ததால் குற்றமா? : தவராசாவின் மகனை தடுத்து வைத்து தாக்கிய பொலிஸ்!

தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...

சாரதியின் கவனயீனத்தால் முதியவர் சாவு :சாரதிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறை

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத்...

நல்லாட்சி உருவாகியிருப்பினும் வடக்கு மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர் – அனந்தி

இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச...

மக்களை ஏமாற்றும் ‘பட்ஜெட்’! – கூட்டு எதிர்க்கட்சி

தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு - செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள்...

துண்டுவிழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா

2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி...

ஐ.நா சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதியின் வருகை இன்று!

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் (Samantha Power, U.S. Permanent Representative to the United Nations) இன்று (21) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் சமந்தா தற்போது இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இவர் இன்று (21)...

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று!

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கானதும் நாட்டின் 69 ஆவதுமான வரவுசெலவுத் திட்டத்தினை நேற்று (20) நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(21)...

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த...

மதத்தை கைவிட்டார்’:தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு...

மாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் ‘யாரும் இல்லை’

மாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் 'இனி யாரும் இல்லை' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர். அதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த...

சினிமாவில் ராசி : நயன்தாராவும் பீர்பாட்டிலும்

தமிழ் பட உலகினர் மத்தியில் ராசி பார்க்கும் பழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த படங்களில் முதல் காட்சியாக வெற்றி, வெற்றி என்ற வசனம் இடம்பெறும். மறைந்த நடிகர் பாலாஜி தயாரித்த படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா என்று இருக்கும் அந்த பெயர்களை அவர் ராசியாக...

நாமக்கல் கோர்ட்டில் 27-ந் தேதி ஆஜராக நடிகர் வடிவேலுக்கு உத்தரவு

நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மதுரையில் நிருபர்கள் சந்திப்பின்போது நடிகர் வடிவேலு பேட்டி அளித்தார். அப்போது அவர், தான் நடித்த ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என்று நகைச்சுவை செய்ததுபோல, பேட்டியின் போது நடிகர் சங்கத்தை காணோம் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ராஜா, நாமக்கல்...

இளையராஜாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது

கோவாவில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். தமிழ் திரை இசையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி...

வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ

பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க கூட்டுப்படைகளும்,...
Loading posts...

All posts loaded

No more posts