வட மாகாண வைத்தியசாலைகளில் அதிகளவான தாதியர் வெற்றிடங்கள்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள 05 மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்கள் தேவை காணப்படுகின்ற போதிலும், 692 பேர் மாத்திரமே பணியாற்றி வருவதாக மாகாண சுகாதார திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்களுக்கான நியமனங்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது 692...

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் : காலதாமதம் ஏன்?

வடக்கு, கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதாவது வீட்டின் அளவுத் திட்டம், வடிவமைப்பு, பயனாளிகள் தெரிவு, ஒரு வீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமூக அமைப்புக்கள்...
Ad Widget

சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு ! – அரசு எச்சரிக்கை

சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி யுவதிகளாக முன்னிலையாகி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்று கொள்ளப்படுகின்றன. பின்னர் காணொளி மற்றும் புகைப்படங்களை பெற்று கொண்டவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று கொள்ளும்...

நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேலும் 41 பேர் தாயகம் திரும்பினர்

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை வந்தடைந்த இவர்களில் 15 ஆண்கள் மற்றும் 26 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும்...

பரீட்சாத்திகள் குழப்பம் : ஒரே தினத்தில் இரு பரீட்சைகள்

இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சையும் இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும் ஒரே தினத்தில் நடைபெறுவதால் பரீட்சாத்திகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சை எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும்...

மத்தியூஸிடம் 5 மணி நேரம் விசாரணை!

ஆட்டநிர்ணய சதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரங்கன ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரிடம் ஆட்டநிர்ணய தரகர்கள் நெருங்கியமை தொடர்பிலேயே தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக...

கூட்டமைப்புக்கு முரணாக செயற்பட மாட்டேன்! தமிழ் மக்களின் உரிமைக்ககாக குரல் கொடுப்பதே பேரவையின் ஒரே இலக்கு!! – முதலமைச்சர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது - எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது - இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப்...

கிளிநொச்சியில் இன்று சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை முதலமைச்சர், வடக்கு, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! – ஜனாதிபதி

புலிப் பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின்...

அரசியல் கைதிகள் என எவரும் இல்லை!

போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சுவிஸர்லாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து...

விண்ணப்பம் கோரல்

இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை நிர்வாக சேவை ஆகியவற்றுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் - 3 க்கு திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் 219 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையின் அடிப்படையில் 515 பேரும் அனுபவ அடிப்படையில் 118 பேர் உள்வாங்கப்படவுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சைக்கு...

மீள்குடியமர்த்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் விழாவில் கலந்துகொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள் பற்றி விசாரித்ததுடன், அவர்களை மீள்க்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத...

பாகிஸ்தான் பல்கலையில் தாக்குதல்: 15பேர் பலி; 60பேர் காயம்

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில், குறைந்தது 15பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000பேர் இருப்பதாகவும் தப்பிவந்தோரின் கருத்தின்படி சுமார் 60பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத டிக்கட்டுக்களை கொள்வனவு செய்யும் வசதியை Hutch அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை...

இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உறுக்கமான கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில்...

அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவிலான ரூபாயின் மதிப்பு தற்போது 146 ஆக காணப்படுவதாகவும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவது, இதுவே முதல் முறை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் அரசியல்வாதிகள், விளையாட்டு துறையினர், கலைஞர்கள் போன்றோரை, எப்.சீ.ஐ.டிக்கு...

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தாக ஏ.ஆர். ரகுமான் காரணமா?

ஏ.ஆர்.ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சியால் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது. சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கின்ற இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம்...

வீட்டுத்திட்ட வீட்டில் மது அருந்தும் இளைஞர்கள்!

தெல்லிப்பளை – அளவெட்டி வீட்டுத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உரியவர்கள் கடந்த பல வருடங்களாக மீள்க்குடியேறாமையால் அயலில் உள்ள கலவன் பாடசாலையும், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளவெட்டி அருணோதயாக்...

ஊடகங்களின் நடவடிக்கை குறித்து அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி

சில ஊடகங்களின் நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். சில ஊடகங்கள் வேண்டுமென்றே அணியின் வீரர்கள் மீது சேறு பூசியிருந்தன. ஆட்ட நிர்ணய சதி குறித்து நடைபெறும் விசாரணைகளை பயன்படுத்தி வீரர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். எனினும் விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டுத்துறை அமைச்சர், பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமற்போன கிளிநொச்சி சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல...
Loading posts...

All posts loaded

No more posts