காணியை மீட்டுத் தாருங்கள் -கெற்பேலி பொதுமக்கள்

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

எழுதுமட்டுவாழில் இந்து மயானத்தை அபகரிக்க படையினர் முயற்சி! மக்கள் எதிர்ப்பு

எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

காணிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் அறிவித்தல் வந்தது?

வலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே (more…)

காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன்

வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், (more…)

வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 3 ஆண்டுகளில் இரு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)

காணி பறிப்புக்கு எதிராக திக்கம் மக்களும் வழக்கு

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் திக்கம் பகுதியில், இராணுவ முகாம் அமைப்பதற்குத் தங்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் 31 பேர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். (more…)

உடுப்பிட்டியில் முகாமில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர் தாக்குதல்!

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

வலிகாமம் வடக்கு மக்களின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. (more…)

காணி சுவீகரிப்புக்கு எதிராக 1,474பேர் ரிட் மனு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், நேற்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். (more…)

யாருமற்ற அனாதைகளா நாங்கள்? எங்களையும் கண்திறந்து பாருங்கள்: கோணாப்புலம் நலன்புரி மக்கள்

யாழ்ப்பாணம் மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சேவையிலுள்ள எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என (more…)

கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு' வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

நலன்புரி முகாமிலுள்ள வலி. வடக்கு மக்கள் புயலால் பாதிப்பு

மல்லாகம், கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி, (more…)

இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை – நோர்வே

நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் (more…)

வடக்கில் மக்களின் காணி அபகரிக்க இரகசிய மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! அரசாங்கத்தின் சூழ்ச்சி திட்டம் அம்பலம்

வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. (more…)

முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ஒதுக்கீடு- தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் பலாலியில் மீள்குடியேற்றம்: டக்ளஸ்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் :-மாவை

வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. (more…)

காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் – சுமந்திரன்

வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று (more…)

உறுதிகள் பெயர் மாற்றாமையால் வழக்குகள் தொடுப்பதில் சிக்கல்; வலி.வடக்கு மக்கள் சிலர் சிரமத்தில்

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் தயாராக உள்ள போதும், அவர்களின் உறுதிகள், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

காணி சுவீகரிப்பு சட்டவிரோதம் ;- முன்னாள் காணி ஆணையாளர்

வலி.வடக்கில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவை அனைத்தும் அடிப்படையிலிருந்து காணி சுவீகரிப்பு சட்டத்துக்கு முரணாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (more…)

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts