விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார். மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது....

மீள்குடியேற்றத்தின் பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள்

மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...
Ad Widget

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் 25 வருடங்களாக இயங்காமல் இருந்த நடேஸ்வராக் கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்டிய சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக வலி வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் போர்...

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரக் கல்லூரியை விடுவிக்க நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் நடேஸ்வரக் கல்லூரியை விடுவித்து மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக்கு அண்மையாக இருக்கும் பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் 25 வருடங்களின் பின்னர்...

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. 2...

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்த புதிய அமைப்பு உதயம்

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை மனோகரன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரணையடன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பாடி விருந்தினர்...

அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் – இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன்

நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன்...

வங்கிகள் மீண்டும் பழைய இடத்துக்கு வரவேண்டும்

வலிகாமம் வடக்கில் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னைய காலங்களில் இயங்கிய வங்கிகள் மீண்டும் அந்த இடங்களில் இயங்கவேண்டும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! – பிரதேச மக்கள்

அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியா? மீள் குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும்,...

மயிலிட்டி மீள்குடியமர்வு தொடர்பில் அறிக்கை சமர்பிக்க பிரதமர் உத்தரவு

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்களை மீள குடியமர்த்தல் தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளரும் பிரதேச செயலாளர்களும் இணைந்து ஓர் அறிக்கையை சமர்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சனிக்கிழமை (30)...

வலி வடக்கு மீள்குடியேற்றம் : இராணுவத்தையும் உள்ளடக்கிய குழு தகவல் சேகரிப்பில்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...

மீள்குடியேற்றத்தினை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது – வலி. வடக்கு மக்கள்

புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...

யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள்...

படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! – பாதுகாப்புச் செயலாளர்

தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

யாழில் இன்று காணிகள் விடுவிக்கப்படவிருந்த நிகழ்வு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி...

மீள்குடியமர்த்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் விழாவில் கலந்துகொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள் பற்றி விசாரித்ததுடன், அவர்களை மீள்க்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத...

விடுவிக்கப்பட்ட காணிகளின் இயற்கை வளங்களை அபகரிக்கும் திருடர்கள்! அதிகாரிகள் பாராமுகம்!!

அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய...

மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு!

யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை...

பாடசாலையில் தங்கியிருக்கும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம்...
Loading posts...

All posts loaded

No more posts