Ad Widget

விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.

மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது.

இதனால், காணிகள் விடுவிக்கப்பட்டும் பொதுமக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts