- Wednesday
- March 4th, 2026
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அவ்வாறே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக புதிய அரசியல் தீர்மானங்கள் பலவற்றை மே முதலாம் திகதிக்குப் பின் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து ஊழல் மோசடிகள் எதுவும்...
மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். போக்குவரத்துக்களுக்காக அரச பஸ்களை பயன்படுத்துவதாயின் அதற்கான பணத்தை...
தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான, இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜுன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்புகள்...
யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட்...
சுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். அந்த விஜயத்தின் போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த...
ஒரு அமைச்சர் என்ற முறையில் உயர்ஸ்தானத்தை வகிக்கும் சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இங்கு வந்தது எமக்கு பெருமை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிடன் வௌிவிவகார அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தார். இங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட வட மாகாண முதலமைச்சர், நீங்கள்...
ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது. இடம்: சிவன்கோவில் திருமண மண்டபம், பருத்தித்துறை நேரம்: பி.ப 3.00 மணிக்கு ஆரம்பம் காலம்: 01 மே 2016 (ஞாயிற்றுக்கிழமை) தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காரம், தமிழ்...
மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூறமுடியாது என அதன் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இன்றை...
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜ சிறிகஜன் தலமையிலான பொலிஸ் குழவினரே இவர்களை கைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கொள்கை குழு தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி...
தமது காணிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராக போராடுவதற்கு முல்லைத்தீவு மக்கள் தீர்மானித்துள்ளனர். அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட...
ஓமந்தையில் இராணுவ வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச் சிப்பாயிடம் கேட்டிருந்தேன். அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல்போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார்....
முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் சதொச விற்பனை நிலையத்தின் 317 வது கிளையினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்...
வாய்மூலமாக வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்தை இந்த மாதத்திற்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்திற்கு வாய்மூலமாக வழங்கப்படும் சொட்டு மருந்து என்று பெயரிட்டுள்ளதாக தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனே தெரிவித்தார். இதுவரையில் போலியோ தடுப்பூசி பாவிக்கப்பட்டதாகவும், எனினும் எதிர்வரும் காலங்களில்...
புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆதலால் பெண்கள் வன்முறைச் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாலிடம் கேட்டுக்கொண்டனர். புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த பெண்ணின், கழுத்தை நெரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை (25)...
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் பெற்றோல் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதமமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வடபிராந்திய பணிமனை தெரிவித்தது. யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த இரண்டு நாட்களாக பரவிய வதந்தி காரணமாக, யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள்...
நீதிமன்ற செயற்பாடுகளை விளையாட்டுத்தனமாக எடுக்க வேண்டாம். பொய் சொல்லவும் வேண்டாம். நான் மன்றில் தெரிவிக்காத தகவல்களை வெளியில் எவ்வாறு வெளியிடுவீர்கள்?' இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வு பொலிஸாரை கடுமையாக எச்சரிக்கை செய்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நேற்று திங்கட்கிழமை (25) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான்...
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது, பஸ்தியன் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (25) மதியம் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பஸ்ஸில் இருந்த பயணிகள், வேறு பஸ்...
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்' என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்....
கிளிநொச்சியில் உள்ள பரவிபாஞ்சான் கஜபா படைப்பிரிவின் இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைவதற்கு முழுமையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தான் படை முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை என்றும் பொதுமக்களின் காணிகளைப் பார்ப்பதற்கே அங்கு சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் மேலதிகமாக கதைப்பதற்கு எவ்விதமான...
Loading posts...
All posts loaded
No more posts
