Ad Widget

கிளிநொச்சியில் சிசுவை நீரோடையில் வீசிச் சென்ற பெண் கைது

கிளிநொச்சி – தர்மபுரம் – புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பிறந்த போது குழந்தை இறந்திருந்தமையால் அதனை நீரோடையில் வீசியதாக, குறித்த பெண், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தர்மபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts