முள்ளிவாய்க்கள் இனப்படுகொலை வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தெய்வேந்திர முனையில் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதான சுடரினை மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஏனைய சுடர்களை முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மதனி, தீபன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், பருத்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பன்னீர் செல்வம் மற்றும் பருத்துறை தமிழரசு கட்சி செயலாளர் தங்கவேலு, இளைஞர் அணி உறுப்பினர் ராகுலன் மற்றும் லவன் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள்.
பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.