விஸ்தரிக்கப்பட்ட பனாமா கால்வாய் வழியாக பயணித்த கப்பலின் கப்டன் இலங்கைத்தமிழர்!

MOL Benefactor’ என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை கடந்த 1 ஆம்...

யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளருக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளரை இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருள்கள் கொள்வனவுகளுக்குரிய விவரங்களுடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டமை, மற்றும் பொருட்கள்...
Ad Widget

வடக்கு மக்கள் யுத்தத்தின் வலிகளை சுமந்தவர்கள்; யாழில் ராஜித

வடக்கில் உள்ள மக்கள் யுத்தத்தின் வலிகளை சுமந்தவர்களாக உள்ளனர் என்று சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நச்சுத்தன்மையற்ற மருந்துக்கள் குறித்த அரச பொறிமுறையை அறிவூட்டும் மாவட்ட வேலைத்திட்ட கூட்டம், நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

பிரித்தானிய முறைப்படி பிரதமராகிறார் மஹிந்த, வெளிவிவகார அமைச்சராக நாமல்

ஸ்ரீலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிவரும் கூட்டு எதிர்கட்சியினர் முதல்முறையாக நிழல் அமைச்சவையொன்றை உருவாக்கியுள்ளனர். இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக்ச நிழல் பிரதமராகவும் தேசிய பாதுகாப்பு சிறப்புரிமைகள் மற்றும் மத விவகார அமைச்சராகவும் பெயரிடப்பட்டுள்ளார். பந்துல குணவர்தன நிழல் நிதி அமைச்சராகவும் நாமல் ராஜபக்ச நிழல் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விமல் வீரவங்ச, வீடமைப்பு...

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில்

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்திற்கான பொருளாதார...

103 முன்னாள் போராளிகள் புற்றுநோயினால் மரணம் ; விசாரணை கோருகிறது கூட்டமைப்பு

புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் 103 பேர் புற்றுநோயினால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு பிணை

கடந்த வியாழக்கிழமை ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வவுனியா நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா நீதிமன்றத்தின் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதியால் பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த புதன்கிழமை இவர்கள் இருவரையும் வவுனியா காவல்துறையினர் கைதுசெய்யவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதிலும் நேற்றயதினம் அவர்களே இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில்...

கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் காணாமல்போன அல்லது கொல்லப்பட்ட 41 ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு வடபகுதி ஊடகவியலாளர்கள் சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை தென்பகுதிக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) சிறீலங்கா அதிபர்...

ஆறிப்போன காயங்களின் வலி யாழ்ப்பாணத்திலும் லண்டனிலும் அறிமுகம்

எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர்...

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கிய இடம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நடந்து முடிந்துள்ள 32ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில்...

நீதிமன்றத் தீர்ப்புகள் மக்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக மாற வேண்டும்!

போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை இழைத்தோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் என, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். சட்ட விளைவுகள் தெரியாமல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைப் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது, பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும்...

யாழில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் விக்கிரமரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொண்டதோடு, பிரதி அமைச்சர் பைசல் கசீம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார...

அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டம் விரைவில்

காணியற்ற அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு நாட்களுக்குள் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் கூறியுள்ளார். அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டிய இராணுவம் :சர்வதேச இந்துமத குருபீடம் கண்டனம்

இந்துக்களின் புனித பூமியாக விளங்கும் வடக்கில் இந்து ஆலயத்தை உடைத்து அழித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளமையை சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மனிதனும்...

எங்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்! கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை

தாம் நிம்மதியாக கல்வி கற்க உதவுமாறு வவுனியா விவசாய கல்லூரி பழைய மாணவர்களும், புதிய மாணவர்களும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, பல மாணவர்கள் பல்வேறு இலட்சியங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனுமே கல்வி கற்கின்றனர். எமது குடும்பங்கள் கூட பல்வேறு கஸ்ட நிலைகளுக்கு மத்தியிலேயே எம்மை படிக்க வைத்துள்ளார்கள். இன்று தென்னிலங்கையில் உள்ள...

தாய்ப்பால் புரையேறி சிசு பரிதாபமாகப் பலி

பிறந்து 35 நாட்களேயான ஆண் சிசுவொன்று, நேற்று புதன்கிழமை (06) தாய்ப்பால் புரையேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் கல்விளான் சுழிபுரம் பகுதியினைச் சேர்ந்த கிருபாகரன் லேசாக் என்ற சிசுவே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை, சிசு அழுத போது அரவணைத்துப் பால் கொடுத்த தாய் நித்திரைத் தூக்கத்தில் அயர்ந்து போயுள்ளதாகக்...

சுற்றுலா மையங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்

“வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு...

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான நான் வெளியிட்ட கருத்து சட்டரீதியான நிலைப்பாடே

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு...

புலியுடன் உறவாடியவரின் நண்பனை நம்புகின்றோம்

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துவருகின்ற ராஜ் ராஜரட்ணத்தின் நண்பனான மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம்' என்று, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'ராஜ் ராஜரட்ணத்தின் நிறுவனத்தில் பணியாற்றினார் என்றொரு விடயத்துக்காக மட்டுமே, மத்திய...
Loading posts...

All posts loaded

No more posts