- Monday
- March 9th, 2026
அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் (பெறுமதி சேர் வரி) உள்ளடக்கப்படமாட்டாது என்று தெரிவித்த அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அசாதாரண முறையில் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது. சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான...
இரத்தினபுரி, நிவித்திகலை சிதுறுபிட்டியவில், 50 வயதுடைய நபரினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவியான எஸ்.சரோஜினியைக் கண்டறிய, துரித நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இ/நிவி/தேலை தமிழ் ஆரம்ப பாடசாலையில், தரம்...
போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்...
உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும்...
இராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு...
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது பொம்மைவெளி அபூபக்கர் பிரதான இமாம் எம்.பரூஸ் தொழுகையை மேற்கொண்டார். இதன்போது பெருந்திரளான...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தக் கைது தொடர்பில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா...
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பின்போது, அவர் இன்று இதனைக் கூறியுள்ளார். பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க குறித்த...
பொலனறுவை மாவட்டத்தின் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை கருத்தில் கொண்டு வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு இதற்கு முன் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். நிலையில் கட்டளை 23/2இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த, பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு...
வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திவரை விடுவிக்க சாதகமான முடிவை வழங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன. அதிகாரிகளுக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையிலான பேச்சுக்களின் ஊடாக இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. வலி.வடக்கில் 201 எக்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திப் பகுதி இந்த விடுவிப்பில் உள்ளடக்கவில்லை. இதற்குப் பதிலாக...
சிவபூமியான ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண இராசதானியின் இணுவையம்பதியில் சிவஞான சித்தர் பீடத்தின் அருளாசியுடன், சைவ மகா சபையின் ஆதரவுடன் சைவநெறிக் கூடத்தினரால் ஞானலிங்கேசுவரர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கத்தைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தின் கருவறையில் இலங்கையிலேயே விசேடமாக செந்தமிழால் தினமும் வழிபாடு ஆற்றப்படவுள்ளது. சிவ விரதங்களில்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரிசி, சீனி, மரக்கறிவகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரிதகதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ...
போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்படவுள்ளது. இதுவரைக்காலமும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் 14 நாட்களாக இருந்தன. புதிய முறையின்படி அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை விபத்துக்களின்போது காயங்களை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதி ஒருவர், தமது தண்டப்பணத்தை தாம் விரும்பிய நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் பிரசன்னமாகாது,...
யாழ்.திருநெல்வேலி சந்தை இறைச்சிக்கடை தொகுதி பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குவதாகவும், அதனால் அப்பகுதிக்கு செல்ல முடியாத தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது. திருநெல்வேலி சந்தையில் ஒரு பகுதி இறைச்சிக்கடை கட்டட தொகுதியாக காணப்படுகின்றது. அந்த கட்டட தொகுதியின் கீழ் பகுதியில் மீன் சந்தையும் மேல் மாடியில் இறைச்சிக் கடை தொகுதிகளும் காணப்படுகின்றது. குறித்த...
ஒரு சாதாரண விடயத்தில் கூட ஒருமித்த முடிவு எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முடியவில்லை
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. முக்கிய தலைவர்கள் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண முதலமைச்சர் என இரண்டு தலைவர்கள. கலந்து கொண்ட கூட்டத்தில் இரு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்வதென்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது. ஒரு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம்...
ஆசிய நாடுகளில் பரவலாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். தற்போது, ஆசிய நாடுகளில் பரவலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுவரும்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...
திடீர் சுகயீனம் காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் திடீர் சுகயீனம் அடைந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அவசியம் தேவை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சில நாள்கள் போதனா வைத்தியசாலையில்...
வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. 105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு...
தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால்...
Loading posts...
All posts loaded
No more posts
