- Wednesday
- May 6th, 2026
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார்.
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையிலான பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பொலிஸாரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில்...
நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து...
நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான்...
இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும்...
தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயிரிழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்துள்ளார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து...
நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் எடுத்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையை முறியடிக்க வேண்டும்...
சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட தேவையில்லை என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் மீள்குடியேற்ற செயலணி குறித்து...
இராணுவத்தினரிடமிருந்து காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 2,221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்...
போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது. இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர், யுவதிகளிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்த நான்கு பேரை, பத்தமேனி பகுதியில் வைத்து சனிக்கிழமை (30) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஹயஸ்வாகனமும் ஒரு தொகுதி கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் உட்பட வவுனியா...
தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார்....
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும். குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
தீப்பெட்டி ஒன்றின் விலை, 1 ரூபாவினால் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும்.
நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில் போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அமைதியைக் கெடுத்துவிடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் பிணை மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை 2 ஆம் திகதி...
அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் யோசனை திட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சலுகை அடிப்படையில் வழங்கும் வாகனங்களின் அனுமதிப் பத்திரத்தின் பெறுமதி 30,000 அமெரிக்க டொலர்கள் எனவும், முழு வரியில் இருந்து 50 வீதத்தை சலுகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற...
வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கு அக்கறை காட்டாத வடக்கு மாகாணசபை, சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட செயலணியை நிராகரிப்பதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லையென யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவிக்கு வந்தபின்னர்,...
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். "யுத்தம் நடந்தது...
Loading posts...
All posts loaded
No more posts
