Ad Widget

தொடரும் வாள் வெட்டு ; சங்குவேலியில் இளைஞர் காயம்

சங்குவேலி பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சுன்னாகம் சபாபதிபிள்ளை முகாமிற்கு அண்மையில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சபாபதிபிள்ளை முகாம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்குமிடையில் மோதல் காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று சபாபதிபிள்ளை முகாம் பகுதி இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுதாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரனைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை நேற்றுமுன்தினம் இரவு சங்குவேலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts