Ad Widget

தந்தை, மகன், மகள் தற்கொலை

கொட்டாஞ்சேனை, வாசல மாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 47 வயது தந்தை, 13 வயது மகள் மற்றும் 09 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் விஷமருந்தியிருப்பதாக அயலவர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் மூவரும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts