- Wednesday
- May 6th, 2026
கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள். முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர். இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில்...
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின்...
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஒருவரை, மீட்டுத்தருவதாக கூறி காணாமற்போனவரின் உறவினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபரை யாழ்.பொலிஸார் திங்கட்கிழமை (01) கைது செய்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நீர்வேலியைச் சேர்ந்த வைகுந்தன் என்ற இளைஞன், தனது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்று ஜந்து வருடங்களின் பின்னர், கடத்தபட்டவரின்...
நாரந்தணை 8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சரவணை மேற்கு 1 ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...
இன்று இரண்டாம் நாளாகவும் தொடருகின்றது தொண்டர் ஆசியரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம். வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான நிரந்ததர நியமனங்களை பெற்றுத்தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை நியமனங்கள் கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமக்கான நியமனம் கிடைக்கும்...
துன்னாலை ஆட்டுப்பட்டித் தெருப்பகுதியில் பொலிஸ் என பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் எனப் பொறிக்கப்பட்ட ரீசேட்டினை அணிந்து கொண்டு 33...
கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங்குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் கப்பல் நங்கூரமிடுதல் மற்றும் மீன்பிடி இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. மேற்படி இறங்குதுறை அமைக்கப்பட்டு...
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணுவத்தினரே சோதனை செய்ததாக, நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான, மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து பதிவு செய்யப்பட்டள்ளது. வவுனியாவில் நலன்புரி முகாம்களில் இருந்த இராணுவத்தினர், பெண்கள் நீராடும் பகுதியிலும், மலச கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தகாத முறையில்...
வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152...
எயிட்ஸ் நோய் தீவிரமாகப் பரவும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தேசிய எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் தீவிரமாகப் பரவக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் 79 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த ஏழு மாத காலப் பகுதியில்...
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம்....
நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால்...
இலங்கையில் ஐஎஸ். பயங்கரவாதியொருவர் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுப்பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவின் திருப்பூரில் அண்மையில் ஐஎஸ் தீவிரவாதியொருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவில் கைதாகிய மஜ்னு என்ற கைதிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என நடாத்தப்பட்ட விசாரணையில், மஜ்னு என்பவர்...
மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனிதப் புதைகுழிக்குச் சற்றுத் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் கிணற்றிலிருந்து, நேற்றுத் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்ட சிறு எலும்புத் துண்டுகள் இரண்டும், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மர்மக் கிணறு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுக் காலை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் போனவர்களின்...
மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. 'பசிக்கு எதிரான செயற்பாடு' அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில்...
முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்....
வட்டுவாகலில் கடற்படைக்காக 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த மக்களை போராட வருமாறு பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்களின் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் தெரிய வருவதாவது முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும்...
நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு கடந்த 31-7-2016 கட்சியின் இல.16, மணல்தரை ஒழுங்கை கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான...
Loading posts...
All posts loaded
No more posts
