- Tuesday
- March 10th, 2026
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சரையும் இன்று காலை 9.30 மணியளவில் கைதடியிலமைந்துள்ள வடக்குமாகாண சபைக் கட்டட அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. குறித்த இச்சந்திப்பின்போதே...
வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாதபட்சத்தில் அது மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி ஓமந்தையில் அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், நேற்று திங்கட்கிழமை (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர், கடந்த வாரம் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி...
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் தொடர்புபட்டிருந்த நிலையில், மாணவி கொலை...
ரயில் பயணத்தில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க ரயில் திணைக்களம் தயாராகியுள்ளது. அதற்கமைய, அபராத தொகையை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிதிபலகையில் பயணம் செய்வது, ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் உள்நுழைவது, ரயிலில் மதுபானம் அருந்துதல், தவறான வழியில் மற்ற பயணிகளை தள்ளிக்கொண்டு வருவது போன்ற குற்றங்களுக்காக அபராதத் தொகையே...
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். 'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக்...
இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia - Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education...
சங்காணை பகுதியில் 54 வயது முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ஞானரத்தினம் என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று காலையில் சங்காணை சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி - சங்கானை வீதியில்...
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...
2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்த முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை www.doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அறியமுடியும்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர்...
யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிங்கள பௌத்த தீவிர அமைப்பான ராவணா பலய அமைப்பு யாழ்.பல்கலைக்கழக சூழல் தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாக தெரியவருகின்றது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில்...
இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா...
யாழ்ப்பாணம் பாரதி வீதி கச்சேரியடியில் தனியார் தொலைக்காடசி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் இன்று காலை 7.15 மணியளவில் தன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பலா மரத்துடன் மோதியது. இதில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அங்கு நின்ற மக்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சனிக்கிழமை (23) அதிகாலை சிற்றூழியர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து, வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவசரசிகிச்சைப் பிரிவு தவிர்ந்த வெளிநோயாளர் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பிரதான கதவினை மூடி வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சிற்றூழியர் சங்க செயற்பாட்டாளர் இராசேந்திரன் முகுந்தன் கருத்து தெரிவிக்கையில்,...
காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில், திரையரங்கு வீதியைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். இணுவில் பகுதியில்...
பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார். இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார். தெல்லிப்பழை மணல்குளம்...
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற மினிபஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். ஏ-9 வீதியில் கொக்காவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பேட் ஜெயக்குமார் (வயது 24) அவரது மனைவியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர்....
சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் திகழும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில், மீன்பிடி...
எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும்...
Loading posts...
All posts loaded
No more posts
