- Sunday
- May 10th, 2026
எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக்...
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும்...
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றுக்காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வவுனியா - நீலியாமோட்டைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னி விமானப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, விமானப் படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன்போது மிதிவெடிகள் 49, கைக்குண்டுகள் மற்றும் 60 மில்லிமீட்டர் மோட்டர்...
ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், நேற்று மட்டக்களப்பில், நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்...
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வலய விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண ரீதியிலான போட்டிகளை ஜூன்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது. அகில...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படைப் புலனாய்வு அதிகாரகிள் மூவர் உட்பட அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே...
யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவரை திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக அவருடன் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், யாழில் உள்ள குறித்த திரையரங்கில் சனிக்கிழமை (24) திரைப்படம் பார்க்கச்...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் தெரிவுசெய்யப்பட்ட உரிய பயனாளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், 10.11.2016 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தினைச்...
12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக...
வவுனியா புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இடை வழியில் அவர் உயிரிழந்த சம்பவம், சனிக்கிழமை (24)இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு...
அனுமதிச் சீட்டு (டிக்கட்) இன்றி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 1000 ரூபா வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போக்குவரத்து அமைச்சிடம் குறித்த யோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது அரச பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 250 ரூபா மற்றும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் என்ற வகையில் தான் இந்த மேன்முறையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த...
வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ, பரிசு உறுதிச்சீட்டுக்களையோ பெறுவதானது, இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதை அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அறிவுறுத்துவதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்புடைய தீர்மானம், தேசிய ஊழல் ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாகவும் வர்த்தகர்கள் மற்றும்...
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட...
இனிவரும் காலங்களில் தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருக்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் இடம்பெறுகின்ற சம்பவங்களை மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கியது. இது...
இந்த ஆண்டு ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும்,...
வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற விவாதத்தினை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்தனை வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
தனியார் துறையினரால் அரிசி விலையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் அமீர் அலி கூறுகின்றார். எதிர்வரும் நாட்களில் அரிசியை இறக்குமதி செய்து கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறுகின்றார். ஒப்பீட்டளவில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற அரிசி, சரியான முறையில்...
Loading posts...
All posts loaded
No more posts
