விடுதலைப் போராட்டத்தினாலேயே சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார்: இளஞ்சேரனின் மனைவி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இன்று எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார் என்றால் அதற்கு விடுதலைப் போராட்டமே காரணமென தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை துணை பொறுப்பாளராக செயற்பட்ட இளஞ்சேரனின் மனைவி, ஆனால் அதனை மறந்து சம்பந்தன் செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம், இன்று...

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா...
Ad Widget

மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடத் தேவையில்லை: மஹிந்த

மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுாராட்சி...

கடந்த இரண்டு மாதங்களில் 55 HIV நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் 2017, கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 55 பேர் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் ஆண்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எச்.ஐ.வி பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...

நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது

நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர...

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி...

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் ஜோன் ரெறி!

கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கனடா ரொறன்ரோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ் பொது நூலக...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுடுமாறு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்ததாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குச் சென்று தாக்குதலில் ஈடுபடுவதில்லையென சமாதான ஒப்பந்தம்...

யாழ். குடாநாட்டில் புதிய நோய், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரிவித்துள்ளார். அத்­துடன் இந்­நோ­யி­னால் ­சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வரை­யில்­ சிகிச்சைக்கு வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்­நி­லையில் இந்­நோயின் தாக்கம் தொடர்­பா­கவும், அதனை தவிர்ப்­ப­தற்­கா­ன வ­ழி­மு­றை­கள் ­தொ­டர்­பா­க­வும்­ வைத்­தி­யர்­ ஜ­மு­னாந்­தா தெரிவித்ததாவது, தற்­போது...

வடக்கு முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல்போனோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் 28 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முதலமைச்சரின் காலில் விழுந்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழுதுள்ளனர். அத்துடன் தமது உறவுகளின் விடுதலைக்கு முதலமைச்சர் முயற்சி எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்காக குரல்கொடுக்கவேண்டுமெனவும் அவரின்...

நீதி விசாரணை தேவையில்லை என யாரும் சொல்ல முடியாது

“உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதோலோ அல்லது அத்தகைய உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாலோ, நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது, நீதி விசாரணை தேவையில்லை என்று எவரும் சொல்ல முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது நீதி விசாரணைகளை மேற்கொள்ளாது உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும்...

யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கனடாவின் உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவிகளை வழங்க கனடா - டொரென்டோ மாநகர சபை முன்வந்துள்ளது. இதன்படி, கனடாவின் டொ​ரெண்டோ மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் டொரெண்டோ மாநகர சபை சார்பாக நகர முதல்வர் John Tory யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக வடமாகாண முதலமைச்சர்...

ஆவா குழுவுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை...

சம்பந்தனின் வீட்டின் முன் வெடித்தது போராட்டம்

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிறன்று மாலை...

பன்னங்கண்டி போராட்டம் நிறைவு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் தங்கியுள்ள தமக்கு, காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி, கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளுப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. காணி உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிராமசேவகர் மற்றும் மதகுரு ஆகியோர், போராட்டத்தில்...

 15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து?

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி...

விபத்தில் முன்னாள் போராளி மரணம்

நேற்றைய தினம் ஓடிசுட்டன் சந்தியில் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் வாகனமும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால்(நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குமாரசாமி...

சித்திரவதை குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான அரச அதிகாரிகள் இடைநிறுத்தப்பட வேண்டும்

சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், விசாரணை ஆணைக்குழுக்களாலும், ஐ.நா அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பிரேஸில் நாட்டின் இலங்கைக்கான தூதுவராக பணியாற்றும் முன்னாள்...

டெங்கு நோயினால் காத்தான்குடியில் சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தெரிவிக்கையில், காத்தான்குடியில் கடந்த இரு...

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: யாழில் ஒருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தற்போது அதிகமாக பரவி வருகின்ற நிலையில் இவ்வருடம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகியுள்ளதாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் செயற்பாடு...
Loading posts...

All posts loaded

No more posts