Ad Widget

ஆவா குழுவுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் வௌ்ளவத்தை பிரதேச பிரதேசங்களில் ஒழிந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவினருடன் தொடர்புடைய சந்தேகநபர்களால் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts