பரிந்துரைக்காத ஒருவரை அமைச்சராக்க டெலோ எதிர்ப்பு

“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமைச்சர் பா.டெனிஸ்வரன் டெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு...

‘டெனிஸ்வரனை நீக்கிவிட்டேன்’ : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

“வடமாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நேற்று (22) அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “டெலோ விடுத்த கோரிக்கைக் கேற்ப விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாது எனவும் அவரை...
Ad Widget

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு : மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம்

தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி...

யாழில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 05 பொலிஸாரும் மீண்டு விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது துப்பாக்கிப் சூடு மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று (22.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர்...

எனது பிள்ளையின் படுகொலைக்கு நீதி வேண்டும்: கஜனின் தாய் மீண்டும் வலியுறுத்து

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் தனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை சேர்ந்த நடராசா...

ஆவாக்குழுவின் அடையாள அணிவகுப்பு ஒத்திவைப்பு!

யாழ்.பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த இருந்த நிலையில், மன்றுக்கு பதில் நீதிவான் சமூகமளித்திருந்திருந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில்...

கேப்பாபிலவு நிலம் விடுவிக்கப்படும்: சந்திரிக்கா

கேப்பாப்பிலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டார நாயக்கா குமாரதுங்க காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். கேப்பாப்பிலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற குழுக்களின்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது : சுவாமிநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்த அமைச்சர், நீதி அமைச்சே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். அநுராதபுரம் சிறைச்சாலையில்...

ஜனாதிபதியின் செயற்பாடு வெறும் கண்துடைப்பா? : சிவாஜிலிங்கம் கேள்வி

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலைசெய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்கியமை வெறும் கண்துடைப்பா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் 200 தமிழ் அரசியல் கைதிகள்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் குடும்பத்திற்கு வீடு!!

யாழ்.கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உயிரிழந்த மாணவன் சுலக்சனின் சொந்த இடமான சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. நேற்று யாழ் வருகைதந்த அமைச்சர் சுவாமிநாதன் வீட்டுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளார்....

வவுனியாவில் கொடூரம்: சிறுவன் மீது சித்திரவதை!

வவுனியா - குருமன்காடு பகுதியில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் தாயுடன் வசித்த நான்கு வயதுச் சிறுவன், அப்பெண்ணின் இரண்டாவது கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவனைப் பார்க்க அவனது தந்தை, (தனது மனைவியின் முன்னாள் கணவன்) ஞாபகம் வருவதாகக் கூறியே அவன் சிறுவனைத் தாக்கியுள்ளான். தற்போது...

கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்றிட்டம் : விண்ணப்பம் கோரல்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கலைஞர்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, உடுவில் பிரதேச செயலாளர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச கலாசார அதிகார சபையில் அங்கத்துவமுடைய கலைஞர்கள் 55 வயது முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள்...

கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. கேப்பாப்புலவு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

பெயர்ப் பலகைகள் சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது : மனோ

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதுவார்களேயானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச...

21 வது கடற்படைத் தளபதி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்

இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார். இன்று (22) காலை கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதி தமது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்தவினால் வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யாவுக்கு சம்பிரதாயபூர்வமாக கடற்படைத் துறையின்...

வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியாவில் குருமன்காடு – காளி கோவில் வீதியில் வாள்களுடன் வந்த குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம், நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்திலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமத நிலையினைப் பாதிக்கப்பட்ட தரப்பினரோ அல்லது சர்வதேசமோ...

வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த வாக்குமூலத்தினை அடுத்த வழக்குத் தவணைக்குள் நீதமன்றிற்கு வழங்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

புகையிரத விபத்துகளைத் தடுக்க உடன் நடவடிக்கை அவசியம் : சி.தவராசா

புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (24.08.2017) வட மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல பாதுகாப்பற்றவையாகக் காணப்படுவதனால் தொடர்ச்சியான விபத்துகள்...

காலத்தை வீணடிக்காது வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்: இரா.சம்பந்தன்

காலத்தை வீணடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு...
Loading posts...

All posts loaded

No more posts