Ad Widget

வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியாவில் குருமன்காடு – காளி கோவில் வீதியில் வாள்களுடன் வந்த குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம், நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழுவினர் எனவும், குடும்பத் தகராறு ஒன்றிற்காகவே பழி வாங்கும் நோக்கில் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts