- Tuesday
- May 19th, 2026
கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சிக்கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்...
முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும்...
இரண்டு நாட்களாக தொடர்ந்த மர்ம காய்ச்சலின் காரணமாக யாழ்.பல்கலைக் கழக மாணவன் ஒருவர் நேற்றுமுன் தினம் திடீரென உயிரிழந்துள்ளார். வவுனியா, மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த வரும், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவனுமான விஜயரட்ணம் லிந்துயன் (வயது 23) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த மாணவன் கோண்டாவில் பகுதியில் உள்ள...
ஐக்கிய அமெரிக்காவிற்கு திருகோணமலையில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக உள்ளது. புதிய கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையாவும் அந்நாட்டில் பணியாற்றியவர். எனவே அவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர...
குற்றம் சுமத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் இரசாயனவியல் வினாத்தாள் துண்டுப்பிரசுரத்தை பரீட்சைக்கு முன்பதாக வௌியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் காணாமலாக்கப்பட்ட உறவினருக்குப் பதில்கூறக்கோரி 150 நாட்களைக் கடந்து தொர்ச்சியாக இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அண்மையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர். அங்கு கருத்துத் தெரிவித்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர்களில் ஒருவரான ச.தனுஜன் ´´மக்கள் தமது உறவுகளைப்...
கட்சியில் எனக்கான அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள் என வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். தனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தனது செயலாளர்...
வவுனியாவில் 10 வயதுச் சிறுவனைப் பயன்படுத்தி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான 18...
வட.மாகாண சபையின் புதிய போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) பரிந்துரை செய்துள்ளது. வவுனியாவில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே தமிழீழ விடுதலை இயக்கம் டெனிஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எனினும் தான் ஒரு...
சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் நெவில் பர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்கள் 100 பேரும் உள்ளடங்கலாக 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சில...
இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய...
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கமைவாக 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும். அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய்...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு வியாபாரங்களில் ஈடுபட்ட 27 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இரகசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவரும்...
யாழ்.மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர். இதனை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச் சேவையினை www.jaffna.dist.gov.lk எனும்...
கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு அங்கமான நெற் களஞ்சியங்கள், நெல் உலரவிடும் தளங்கள் போன்ற கட்டுமானங்களும்...
இலங்கைக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து இலங்கையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அவசியமான மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த செயற்பாட்டுக்காக கண்டியில் அவர்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி மூன்று முன்னாள் போராளிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் சுமார் 20 முன்னாள்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கள் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துண்டுப்...
நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய...
20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார். மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில்...
Loading posts...
All posts loaded
No more posts
