Ad Widget

கட்சியில் எனக்கான அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள்: டெனிஸ்வரன்

கட்சியில் எனக்கான அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள் என வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

தனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தனது செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு, சில நடவடிக்கைகளை நேற்றைய தினம் எடுத்துள்ளார்கள்.

எனது கட்சியின் அடிப்படை உரிமையினை எதிர் வரும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய அடிப்படையிலும் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன்” என பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts