Ad Widget

சிறுவனைப் பயன்படுத்தி துணிகரக் கொள்ளை: மூவர் கைது!

வவுனியாவில் 10 வயதுச் சிறுவனைப் பயன்படுத்தி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதுடன், இவர்கள் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள் செல்ல வைத்து கொள்ளைகளில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts