- Saturday
- May 16th, 2026
பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் வேலை வழங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு...
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் குறித்த கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன், பெற்றோல்...
இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர்...
தமிழரசுக்கட்சியின் பத்திரிகையாக வெளியாகியுள்ள புதிய சுதந்திரன் தொடர்பில் பங்காளிக்கட்சிகள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மேலும், தமிழரசுக்கட்சியின் சில செயற்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அப்பத்திரிகை அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப அந்தப் பத்திரிகை வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்கள், சர்வதேச சமூகத்துடனான...
முல்லைத்தீவின் ஆழ்கடல் பிரதேசம் வழியாக அரியவகை இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்பட்ட இந்த இராட்சதப் பறவை, வட – கிழக்கு கடல் வழியாக ஆழ்கடல் நோக்கிப் பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு...
உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு பாரிய இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியின் கரையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து உடையார்கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும்...
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ள அமர்வின் முதல் அங்கமாக மாநகர மேயர் மற்றும் துணை மேயர் தெரிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி...
இன்றைய அரசியல் கலாசாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக உருமாறி வரும் தமிழ் சமூகம் கல்வி அறிவிலும் பின்தங்குவார்களாயின் எமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதமர அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
தந்தையுடன் இணைந்து வாழ வழியமைக்குமாறு கோரி அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கொழும்பிற்கு சென்றுள்ளனர். கொழும்பிற்கு சென்றுள்ள அவர்கள் இன்று (சனிக்கிழமை) வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஆனந்தசுதாகரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட தரப்பினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தந்தையை மீட்கும் முயற்சியில் அவரது பிள்ளைகள் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...
வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி கடன்...
பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஐ.ஓ.சி. 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமால் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்ததாக வெளியான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி உண்மைக்கு புறம்பானது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி குறித்து எழுப்பப்பட்ட வாரமொரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும்...
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா நேற்றய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கு இலங்கை வந்துள்ள இவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள், நடிகருடன்...
‘‘இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.’’ இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை...
யாழ்ப்பாணம் – அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளசந்தேகநபர்கள் இருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சம் ரூபா சரீர பிணைகளில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...
கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிரு ந்த பெண்கள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாளால் வெட்டியதில் 3 பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, செம்மணி நாயண்மார்கட்டு பகுதியில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாளாள் வெட்டியுள்ளார். வெய்யில் உகந்த பிள்ளையார்கோயில் இடம்பெற்ற வழிபாட்டிற்கு...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும்...
உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு திருடர்களும் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆனால் இதன்போது ஒருவர் மட்டுமே பிடிக்கப்பட்டார்....
பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வடக்கு, கிழக்கில் 100 மாணவர்களை விட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
