Ad Widget

கூட்டமைப்பிற்குள் மீண்டும் பனிப்போர்: அதிருப்தியில் பங்காளிக்கட்சிகள்!

தமிழரசுக்கட்சியின் பத்திரிகையாக வெளியாகியுள்ள புதிய சுதந்திரன் தொடர்பில் பங்காளிக்கட்சிகள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

மேலும், தமிழரசுக்கட்சியின் சில செயற்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அப்பத்திரிகை அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப அந்தப் பத்திரிகை வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்கள், சர்வதேச சமூகத்துடனான சந்திப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூட தமிழரசுக்கட்சி தலைவர்களுடன் இருந்த பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் படத்தை வெட்டி இருட்டடிப்புச் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts