Ad Widget

யாழில் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் குறித்த கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன், பெற்றோல் குண்டு வெடித்தனால் கடைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts