Ad Widget

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஐ.ஓ.சி. 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts