- Wednesday
- May 13th, 2026
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு
அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை...
மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலாத் தினம் - 2018 யாழ்ப்பாணம் மாநகர...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது,...
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார். வேலணையைச் சேர்ந்த 32 வயதான 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி என்பவரே உயிரிழந்துள்ளார். பன்னீர்க்குடம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணித் தாய் கடந்த...
யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு...
யாழில் ஆறு வயது சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் ஒருவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ்...
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 23 நோயாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் 17 நோயாளர்கள் பார்வைக் குறைபாடுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம்...
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இரத்ததானம் வழங்கியுள்ளார். தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது சிவில் உடையில் வந்த புலனாய்வு உத்தியோகத்தர்கள் நிகழ்வு குறித்து கேட்டறிந்துள்ளனர். அதன்...
உண்ணாவிரத போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு...
திருகோணமலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்குகள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றதுடன், இதன்போது குறித்த பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஆசிகுளம் பகுதியில் வசிக்கும் 29 வயதான நடராசா போதநாயகி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததுடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் நேற்று...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது. சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். “ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன....
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். புதிய...
டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்....
இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினரை யுத்தக் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே...
எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை...
இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகளை உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 80...
சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே சிங்கள மக்களின் தரப்பிலிருந்து...
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நல்லாட்சியில் மீண்டும்...
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த போராட்டத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
