Ad Widget

நல்லூர் நினைவுத் தூபியில் திலீபனுக்கு நினைவேந்தத் தடையில்லை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிகழ்வு சட்டவிரோதமானது அல்ல என தெரிவித்த நீதவான் அதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தார் என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

Related Posts