Ad Widget

திலீபனின் நினைவு நாளில் புலனாய்வு அதிகாரி இரத்ததானம்!

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இரத்ததானம் வழங்கியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது சிவில் உடையில் வந்த புலனாய்வு உத்தியோகத்தர்கள் நிகழ்வு குறித்து கேட்டறிந்துள்ளனர். அதன் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை சக அதிகாரியிடம் கொடுத்துவிட்டு இரத்ததானம் வழங்கியுள்ளார்.

எனினும், புலனாய்வு நடவடிக்கைக்காகவே அங்கு குறித்த அதிகாரிகள் வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை மறுத்துள்ள ஏற்பாட்டுக்குழுவினர், இரத்ததானம் செய்வதற்காகவே குறித்த அதிகாரிகள் அங்கு வந்ததாகவும், அவரது பணி நிமித்தம் வழங்கப்பட்டிருந்த ஆயுதத்தினையே தம்முடன் எடுத்து வந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

Related Posts