மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

யாழ்ப்பாணம் மைலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார். மிக நீண்டகாலத்தின் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த துறைமுகம் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மைலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என இராணுவம் உறுதியாக கூறியிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின்...

பிரதமர் ரணில் நல்லூர் கந்தனிடம் வழிபாடு!

வடக்குக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று 10ஆம் திருவிழா இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் ஆலயத்துக்கு இன்று காலை வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார். முன்னதாக நல்லூர் ஆதீன...
Ad Widget

தீவிரவாத அச்சுறுத்தல் இப்போதும் உள்ளது! மக்களுக்காகவே பாதுகாப்பு!! – இராணுவ தளபதி

நல்லுாா் ஆலயத்திற்குவரும் பக்தா்களின் நன்மைகளுக்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ள்ளதாக இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைவாக, நல்லூர் கோயிலுக்கு வரும்...

யாழ். பல்கலை. மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முன்தினம் 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு...

பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள்!

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முதல் நிகழ்வாக இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ள பிரதமர், அதன்பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அங்கு சைவ சமய...

இனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்!

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நேரடியான இனப்படுகொலையாளி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அவர்...

நியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள்!

பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது கட­மை­க­ளைப் பொறுப்பேற்கவில்லை என வவு­னியா மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்­ளார். நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நிய­ம­னத்­தில் இரண்­டாம் கட்ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்க­ளில் 197...

நல்லூரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மூவர் விசாரணைகளின் பின் விடுவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நல்லூர் ஆலய வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண...

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு!

பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன் மற்றும் அ.சிவஞானசீலன் ஆகியோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு தமிழ்ப் பழமொழிகள் அகராதி தொகுப்பாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யா/ஹாட்லிக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு தமிழர் பாரம்பரிய முறைப்படி பிரதம விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு...

நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர்கள் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவரும் முஸ்லிம் இளைஞர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் ஆலய வளாகத்துக்குள் சந்தேகத்திற்கிடமான...

யாழில் அல்லை விவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் திறப்பு!!

அல்லைப்பிட்டி விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி இலக்கம் – 384 என்ற முகவரியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 சுபவேளையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகள்...

ஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை – சி.வி. விக்னேஸ்வரன்

யுத்தத்தால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படத்தி வருவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை, அராலி மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,...

கோட்டா வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது – சந்திரிகா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்திற்கு மக்கள்...

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்: ஐ.தே.கவுடன் கோட்டா தரப்பு டீல் – வெளியானது முக்கிய தகவல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவு அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது....

வடக்கு நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் பொறியியலாளர் கைது

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்ட மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால்  ஆரம்ப விசாரணைகள் மேற்கொெள்ளப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விடயம் சம்மந்தப்பட்ட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டது. இவ்வாறு பணிக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்ட கோவைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ,...

தமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை – கோத்தா

இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தனுக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு...

கொக்குவில் பகுதியில் மர்ம கும்பல் அட்டகாசம்!!

கொக்குவில் பகுதியில் மர்ம கும்பலினால் பதற்றமான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 9.30 மணியளவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளது. பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் குடும்பம் வசிக்கும்...

வட- கிழக்கு பெளத்த மயமாக்கல்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாட்டையடி கொடுத்த செஞ்சொற்செல்வர்!!

நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனமண்டபத்தில் நேற்ற முன்தினம் வியாழக்கிழமை(08) இரவு அண்மைக்காலத்தில் சைவசமயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், இந்துசமயக் குருமார்கள், இந்துமதத் தலைவர்கள், இந்து...

வெலிக்கடைக்கு மட்டுமல்ல, செம்மணிக்கும் டக்ளஸ் தேவானந்தா சாட்சி சொல்ல வேண்டும்!! : சிறிதரன்

யாழ் குடாநாட்டில் 3,000 இளைஞர், யுவதிகள் காணாமல் போயுள்ளனர். பலர் செம்மணியிலே புதைக்கப்பட்டார்கள். அதற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்பு கூற வேண்டும். அவரிடமும் அது பற்றியும் விசாரிக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா தனியே வெலிக்கடைக்கு மட்டுமல்லாமல், செம்மணிப் படுகொலை தொடர்பிலும் சாட்சியம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில் திறந்துவைப்பு

பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்துவைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்....
Loading posts...

All posts loaded

No more posts