Ad Widget

நியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள்!

பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது கட­மை­க­ளைப் பொறுப்பேற்கவில்லை என வவு­னியா மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்­ளார்.

நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நிய­ம­னத்­தில் இரண்­டாம் கட்ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.

அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்க­ளில் 197 பேர் நிய­ம­னக் கடி­தங்­களை பெற்­றி­ருந்­த­னர்.

நிய­ம­னக் கடி­தங்­களை பெற்ற 197 பேரில் தற்­போ­து­வரை 146 பேர் மட்­டுமே கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ள­னர் என மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் 57 பட்­ட­தா­ரி­கள் தமக்­கான கட­மை­களைப் பொறுப்­பேற்­க­வில்லை என்றும் இவர்கள் ஏற்­க­னவே வேறு கட­மை­க­ளில் இருக்­க­லாம் என கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts