யாழ்.பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்!!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக பேரவைக்கு முன்வைக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த நியமனத்தை செய்வதற்கான அனுமதியை வரும் 29ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழக பேரவையில் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கோரவுள்ளார் என்று...

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!!

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும்...
Ad Widget

மின் பாவனையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள்...

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என்பதற்கு தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அச்ச சூழ்நிலையில் நிலைமைகளை கையாள்வதற்காக அமெரிக்க படைகள் இலங்கைக்கு வருவதற்கான சத்திக்கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட...

ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்!! : வாசுதேவ நாணயக்கார

யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக...

யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: வீட்டிலிருந்த சொத்துக்களும் நாசம்!

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியதுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி...

பெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை!! குற்றவாளி பொலிஸில் சரண்!!

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்வைத்து ஏற்றுக்கொள்ளப்படும் என, யாழ் மாவட்ட...

தீவிரவாதிகள் விடயத்தில் அரசாங்கம் அசமந்த போக்கு: மயூரன் குற்றச்சாட்டு

உரிமைக்காக குரல் கொடுத்த புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தீவிரவாதியான சஹரானுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மீது எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அசமந்த போக்குடன் அரசு செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே செ.மயூரன் இதனை...

தொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் – பாரதி

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச்...

கொக்குவில் புகையிரத நிலைய அதிகாரி மீது தாக்குதல்!! சந்தேகத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய அதிகாரி மீது மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கொக்குவில் புகையிரத நிலையத்தின் அதிகாரி ரௌடிகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்டார்என்ற சந்தேகத்தில் உடுவிலை சேர்ந்த 22 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலுக்கு...

அச்சுவேலி – மூளாய் சிற்றூர்தி சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது!

மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த வழித்தடம் 773 இலக்க மூளாய் அச்சுவேலிக்கான சிற்றூர்தி சேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் அச்சுவேலி பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வழித்தடத்தினூடாக...

யாழில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு!!

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஒன்று விசமிகளால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மணியந்தோட்டம், உதயபுரம் கடற்கரை வீதியில் இன்று (17) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு அந்தப் பகுதியால் கடற்தொழிலுக்குச் சென்றவர்கள் மாதா சொரூபம் இருந்ததைக் கண்டுள்ளனர். அதனால் அதன் பின்னரே அது...

வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!

வடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் காலநிலை காரணமாக பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றது. வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து மிதக்கும் காட்சி பார்க்கும் மக்களை பெரும் பதைபதைக்கு...

நானும் கஜேந்திரகுமாரும் ஒன்று சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை – க.வி.விக்னேஸ்வரன்

அமரர் க.மு.தர்மராஜா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் நினைவுப்பகிர்வு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 15.06.2019 அன்று மாலை 5 மணிக்குநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் சிறப்பு விருந்தினர் உரை .... குரூர் ப்ரம்மா……… எல்லோருக்கும் இந்நேர மாலை வணக்கங்கள் உரித்தாகுக! அமரர் தர்மராஜாவுடன் அன்று பக்கம் பக்கமாக...

தனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை!!

யாழ்.புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா். இந்த சம்பவம் இன்ற அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக அயலவா்கள் கூறுகையில், பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கின்றனா். இந்நிலையில் மூதாட்டி தனிமையில் வாழ்ந்துவந்தாா். ஓய்வு பெற்ற அரச...

அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை!

கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சை, மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தலை வெளியிடுவதில்லையென அரசு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்

இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான சூழலில் புத்தர் சிலையை தாங்களே அகற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ்...

யாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!! இராணுவம், பொலிஸ் குவிப்பு!!

யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனை நடாத்தியிருந்தனா். இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா்....

ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட...
Loading posts...

All posts loaded

No more posts