தீபாவளி மது விருந்து!! தீக்கிரையானது பேருந்து!!

அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்றது. ,”பேருந்தின் உரிமையாளர் சாரதி, நடத்துனர் என சிலருக்கு தீபாவளியை முன்னிட்டு தீபாவளி தினத்தன்று இரவு மது விருந்து வைத்துள்ளார். விருந்தின் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் பேருந்தின்...

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, ஆட்சியில் அமர்ந்ததும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம்!!!

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த...
Ad Widget

மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் தாக்கம்...

கோட்டாவிற்கு எதிராக யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோட்டபய ராஐபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவரான மகிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா...

சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மேலும் அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும்கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையை ஆரம்பித்த...

மஹிந்த, கோட்டா யாழ் வருகை!!ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பு!!

பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவும் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா். இதற்காக யாழ்.நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும்...

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும் – மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது...

வடமாகாண மருத்துவ மன்றத்திற்கு புதிய நிர்வாகக்குழு தெரிவு

வட மாகாண மருத்துவ மன்றத்திற்க்கான புதிய நிர்வாக குழு கடந்த சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. நிர்வாகக் குழுவில் தலைவராக தலைவர் - Dr.P.அச்சுதன் உம் செயலாளராக Dr.G.றஜீவ் உம் பொருளாளராக Dr.s. உமாசுதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

திங்கட்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதேசசபை உறுப்பினர்களுக்கு காவல்துறை உத்தியோகஸ்தர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு!!

வலி.வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்திற்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உறுப்பினர்களுக்கு தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வலி.வடக்கு பிரதேச சபையின் 19ஆவது கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட...

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே அடுத்த முடிவு – மாவை சேனாதிராஜா

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும்...

திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்!!- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை!!

இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது...

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின்...

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் என புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் திங்கட்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட்...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒருவாரத்துக்கு நீடிக்கும்

அண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பெரும்பாலான திரவ...

Climathon Jaffna நிகழ்வின் ஊடக அறிக்கை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019” ஒக்டோபர் 24, 25 ,26 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது. இலங்கையில் இருந்து...

யாழ் சென்னை விமான சேவைக் கட்டணம் தொடர்பில் பேச்சுவார்த்தை!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் முற்பகுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்கள் சிவில்...

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்களமொழிமூல முன்பள்ளி!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் இந்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வோதயத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மும்மொழிக் கல்விக்காக...

யாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்!

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசியுள்ளார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts