Ad Widget

தீபாவளி மது விருந்து!! தீக்கிரையானது பேருந்து!!

அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்றது.

,”பேருந்தின் உரிமையாளர் சாரதி, நடத்துனர் என சிலருக்கு தீபாவளியை முன்னிட்டு தீபாவளி தினத்தன்று இரவு மது விருந்து வைத்துள்ளார்.

விருந்தின் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் பேருந்தின் உரிமையாளர் நடத்துனரைத் தாக்கியுள்ளார். அந்த ஆத்திரத்தில் நடத்துனர் வெளியில் சென்று மேலும் மூவரை அழைத்து வந்து பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.

நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் தேடப்படுகின்றனர்” என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts