கோரோனா அச்சுறுத்தல்; பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல நிதி மற்றும் பொருள் நிவாரணங்கள்!!

புதிய கோரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000...

கோரோனாவால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!

நாட்டில் நேற்றையதினம் கோரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக...
Ad Widget

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித் தினம் நாளை!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித்திகதி நாளையாகும். இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி கடந்த 13 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட பிரதி ஆணையாளர் நாயகம், கொரோனா வைரஸ் பரவல்...

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சில விடயங்களை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு நாளில் ஒரு சில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். மன உளைச்சல்...

வடக்கில் கொரோனா தொடர்பான அறிவித்தல்களுக்கு புதிய அழைப்பு எண்கள்!

கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்...

வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்

கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயூதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு கட்ட நடவடிக்கை. இதன் கீழ் நாம் வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி நமது...

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர்!! உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம் இல்லை!!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மார்ச் 28ஆம் திகதி வெளியிடுவது...

கோரோனா அறிகுறி; பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை நண்பகல் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது....

கோரோனா தொற்றுள்ளோர் எண்ணிகை 122ஆக உயர்வு!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் இருவர் இன்று (மார்ச் 30) திங்கட்கிழமை பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 11 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....

மீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை!

யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில், “உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும்...

கோரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 27 வரை ஊரடங்கு அவசியம்!!

நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். “கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. இந்த மருந்து எதிர்வரும்...

ஏப்ரல் மாத ஓய்வூதியம் பற்றி ஓய்வூதியர்களுக்கு அரசின் அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 2, 3 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, நிதி அமைச்சின் சார்பில் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்விரு தினங்களில் பெற முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6ஆம் திகதி அவர்களுக்கு அதனை வழங்கி முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இடம்பெற்ற...

பட்டதாரி பயிலுநர்கள் இன்று திங்கட்கிழமை அறிக்கையிடுவது அவசியமில்லை!!

பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்கள் மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கடமை நிலையங்களில் அறிக்கையிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்ட விதிகளின் அடிப்படையில் மறு அறிவித்தல்வரை பட்டதாரி பயிலுநர் அறிக்கையிடுவது அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பட்டதாரி...

மக்களுக்கு நிவாரணமளிக்கும் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும்!!

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும். எனவே தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், பொலிஸார் மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கோரி நிற்கிறது. இது...

கோரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி நேற்றையதினம் உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மாரவிலயைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடத்தை...

யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வில்லை- ஏனைய மாவட்டங்களில் நாளை தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி...

யாழ்ப்பாணம் மறியல்சாலையிலிருந்து 110 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!!

யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்கள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபர்களை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த...

இலங்கையில் தமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்புக் கிடைக்கும் -மாவை

தமிழர்கள் எட்டுப் பேரை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தபாயவின் செயலானது, தமிழினத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கெதிராக எக்குற்றத்தையும் யாரும் செய்யலாம், இனத்தையே அழித்துவிடலாம் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. அதனை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்...

யாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டது. தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை...

மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு- யாழ். அரச அதிபர்

யாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மீன்பிடியில்...
Loading posts...

All posts loaded

No more posts