யாழ்.பல்கலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சி.ஐ.டியால் 3மணிநேரம் விசாரணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. (more…)
Ad Widget

விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்தார். (more…)

தமிழ் பேசும் மக்களின் வாழ்வைக் கட்டியயழுப்ப இலங்கை அரசின் விசேட நிதி ஒதுக்கீடு தேவை; மாவை. சேனாதிராசா வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டி யெழுப்புவதற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. (more…)

மாதகலில் விபத்து இளைஞர் சாவு

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து மாதகலில் சனிக்கிழமை முற் பகல் இடம்பெற்றது. (more…)

புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது

யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (more…)

யாழ். நகரில் கழிவுநீர் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)

வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய நியமனத்தில் பாரிய மோசடி!- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணத்தலிருந்து வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய இடமாற்றத்தில் பல்வேறு குழறுபடிகளும் ஊழல் மோசடிகளும் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)

கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு!– டக்ளஸ் தேவானந்தா

கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு! என கவித்தமிழில் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான...

யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாலும் போராட்டம் மீண்டும் தலைதூக்கும்!!; நாடாளுமன்றில் முழங்கினார் சம்பந்தன்

"தமிழர் தாயகப்பகுதிகளை அரசு திட்டமிட்டு முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்றும் அரசு பெருமை பேசுகின்றது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டாலும் அங்கு தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே, தமிழர் போராட்டம் ஆத்மார்த்த ரீதியில் மீண்டும் தலைதூக்கும். இவ்வாறு நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்....

கெற்பேலி மயானத்தை மீட்டுத் தரக் கோரிக்கை; ஜனாதிபதிக்கு மக்கள் கடிதம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு அந்தப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். (more…)

நிர்வாகம் கோரினால் பொலிஸாரை அகற்றுவோம்!!,மாணவர் கைது விவகாரத்தில் பொலிஸ் தலையிட முடியாது: எஸ்.எஸ்.பி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் (more…)

கோண்டாவிலில் சடலமாக மீட்கப்பட்டவர் பதுளையைச் சேர்ந்தவர்

வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். (more…)

விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

பொலிஸாரிடம் மேலும் இரு மாணவர்கள் ஒப்படைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் நேற்றய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கோரவில்லை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம்: பாராளுமன்றில் சம்பந்தன்

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கவனத்திற் கொள்ளவில்லை. (more…)

யாழ் பல்கலைக்கழக சம்பவம் எனக்கு எதுவும் தெரியாது; யாழ் புதிய பொலீஸ் அத்தியட்சகர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது என யாழ் பொலீஸ் நிலையத்தின் புதிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts